இஸ்லாமை அறிந்து கொள்வோம்

November 18, 2005

இலங்கை இஸ்லாமிய இதழ்- மீள்பார்வை கட்டுரைக்கு ஒரு விளக்க உரை.

இலங்கை இஸ்லாமிய இதழ்- மீள்பார்வை கட்டுரைக்கு ஒரு விளக்க உரை.

இலங்கை இஸ்லாமிய இதழ்- மீள்பார்வை கட்டுரைக்கு ஒரு விளக்க உரை.

கீழ்க்கண்ட கட்டுரை மீள்பார்வை இணையதளத்தில் உள்ளது.

இஸ்லாமிய எதிர்காலம் சிந்தனைத் தளத்தை சரியாகக் கட்டமைப்போம்

முரப்பி

http://84.9.223.95/meelparvai/mp97/mp97003A.html

இதில் உள்ள விதயங்களை ஆராய்வது முக்கியம்.

# கட்டுரை சொல்கிறது….

இனி மற்றோர் கருத்துக்கு வருவோம். ஑இஸ்லாமிய கிலாபத் அவசியமில்லை. கிலாபத் இல்லாமலேயே இஸ்லாத்தின் தொண்ணூறு வீதத்திற்கும் அதிகமான பகுதிகளைப் பின்பற்றிவிட முடியும் என்பது. கிலாபத் இல்லாமல் இஸ்லாத்தின் பெரும் பகுதியை நடைமுறைப்படுத்த முடியுமா? முடியாதா? என்ற கேள்வி ஒரு புறமிருக்க, இஸ்லாமியக் கிலாபத் என்பது, ஒரு சமூகக் கட்டுக்கோப்பு. ஒரு தலைமை இருந்து, சில சட்ட ஒழுங்குகளை இட்டு தனக்குக் கீழுள்ளவர்களை நிர்வகிக்கும் முறைமை. இந்த முறைமை பின்பற்றப்படுகின்றபோதுதான் ஒரு சமூகம் பூமியில் கால்பதிப்பது சாத்தியமாகிறது. ஒரு சமூகம் கலந்து கரைந்து காணாமல் போகாமல் பாதுகாப்பதும் இந்த முறைமைதான். தலைமை ஒன்று இருந்து அதற்கு கட்டுப்படுகின்ற பண்பு இல்லாது போகிறபோது, சமூகக் கட்டுக் கோப்பை பேணுகின்ற ஒழுங்கு விதிகள் இழக்கப்படுகின்றபோது அங்கு ஒரு சமூகம் இருக்க மாட்டாது. சில சிதறிய தனிமனிதர்கள்தான் இருப்பார்கள். இது பலமல்ல. பலவீனம். எதிரிகள் இத்தகைய ஒரு சமூகத்தில் இலகுவாய் ஊடுருவுவார்கள். எப்போது ஒரு சமூகம் ஒருமுகப்பட்டு ஒரு தலைமைக்குக் கட்டுப்பட்டு, கட்டுக்கோப்பாய் வாழ்கிறதோ அப்போதுதான் அந்த சமூகம் பலமாய் இருக்கும். எதிரிகள் உட்புகுந்து சந்தேகங்களையும் விரிசலையும் ஏற்படுத்தி விடுவதற்கு முடியாமல் இருக்கும். கிலாபத் அநாவசியம் என்கிறபோது, கட்டுப்பாடும் கட்டுக்கோப்பும் இழக்கப்பட்டு விடுகிறது. இந்தப் பண்புகளில்லாத ஒரு சமூகம் உருவாக்கப்படுவதென்பது எதிரிகளுக்கு களமமைக்கும் ஒரு செயற்பாடாகவே அமைந்துவிடும்.

இஸ்லாமிய கிலாபத் என்றதும் சாதாரண தமிழர்களுக்கு ஒன்றும் புரியாது. இஸ்லாமிய கிலாபத் என்பதை இஸ்லாமிய அரசு என்று படித்துப்பாருங்கள். புரியும். இது போன்ற அரபு வார்த்தைகளை போட்டு எழுதும்போது, தமிழர்களுக்கு புரிய கூடாது என்பதற்காகவே எழுதப்படுகின்றன. ஒரு இஸ்லாமியன் இஸ்லாமியனாக வாழ இஸ்லாமிய அரசு கட்டாய தேவை என்று சொல்கிறது.

இஸ்லாமிய அரசு எங்கே அமைக்கப்படும்? இலங்கையில் எந்த பகுதியில்?

மேற்கண்ட கட்டுரை வெளிவந்தது மீள்பார்வை என்ற இலங்கை இஸ்லாமிய இதழில். இஸ்லாமிய அரசு ஒன்றை இலங்கையில் உருவாக்குவதை இஸ்லாமிய அடிப்படை கோட்பாடாக எழுதுகிறார் கட்டுரையாளர். அவர் சரியாகவே சொல்கிறார். இஸ்லாமியர்கள் காபிர் தலைமையின் கீழ் வாழ்வது ஹராமாக ஆக்கப்பட்ட ஒன்று. அதாவது இஸ்லாமியர்கள் காபிர் அரசர், கவர்னர், முதலமைச்சர் போன்றவர்களின் கீழ் இருப்பது விலக்கப்பட்ட ஒன்று. முகம்மது சொன்ன ஹதீஸிலேயே ஒரு முஸ்லீம் எக்காரணம் கொண்டும், ஒரு காபிரின் (முஸ்லீமல்லாதவன்) கீழ் வாழக்கூடாது என்று சொல்கிறது. அப்படி வாழ நேரிடுமாயின் அவர்கள் அங்கிருந்து விலகி முஸ்லீம் அரசர் ஆளும் நாட்டுக்கு சென்றுவிட வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் மேற்கண்ட கட்டுரையில் இது வேறொரு வடிவம் கொள்கிறது. அதாவது இருக்கும் இடத்திலேயே இருந்துகொண்டு, இஸ்லாமிய அரசு ஒன்றை நிறுவ கோருகிறது. தற்போதைய பிரச்னைகளை தீர்த்துவிட்டு, முஸ்லீம்களும் தமிழர்களும் (அதாவது முஸ்லீம் தமிழர்களும் இந்து கிரிஸ்துவ தமிழர்களும்) இணைந்து வாழ முடியும் என்ற புலிகள் மற்றும் புலி எதிர்ப்பாளர்களின் கனவு எவ்வளவு அபத்தமானது என்று இது காட்டுகிறது.

இந்த கட்டுரையில் எதிரிகள் குறிக்கப்படுவது யார்? தமிழர்களா? முஸ்லீமல்லாத தமிழர்களை இங்கே பச்சையாக எதிரிகள் என்று அடையாளப்படுத்துகிறது இந்த கட்டுரை. இன்னும் தமிழர்கள் தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொண்டிருந்தால் யார் என்ன செய்யமுடியும்?

பாகிஸ்தான் உருவாக்கப்பட்டதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இன்று காஷ்மீர் பிரச்னை தீவிரமாக இருப்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். மேற்கண்ட இஸ்லாமிய கோட்பாடுதான் அதன் காரணம் என்பதை புரிந்துகொள்ளாமல், ஒடுக்கப்படுகிறார்கள், அடக்கப்படுகிறார்கள் என்று ரீல் சுற்றுவதும், அதற்கு ஒரு எழவும் தெரியாத அறிவுஜீவிகள் ஒத்து ஊதுவதும் பார்த்து அலுத்துவிட்டது. காஷ்மீர் போன்ற ஒரு தீராத புண்ணை வெகுவிரைவில் இலங்கையில் பார்க்கலாம். வெகுவிரைவில் தமிழ்நாட்டிலும் பார்க்கலாம். எங்கே என்பது அவரவர்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

அடுத்து, சமூக ஒழுங்கின் இருப்பைப் பாதிக்கும் இன்னோர் பிரசாரத்தைப் பாருங்கள். இரகசியச் செயற்பாடுகள் அவசியமில்லை. பகிரங்கமாகவே செயல்பட வேண்டும் என்பது. இரகசியச் செயற்பாட்டுக்கு ஆதாரம் இருக்கிறதா? அது சுன்னாவா இல்லையா? என்ற கேள்விகளை கொஞ்சம் ஒருபுறம் வைத்துவிட்டு, ஒரு சமூகத்தின் இருப்பிற்கும் பாதுகாப்பிற்கும் இரகசியச் செயற்பாடு எவ்வளவு அவசியம் என்பதைப் புரிந்து கொள்ளல் வேண்டும். ஒரு சமூகத்தின் திட்டமிடல் பகுதி இரகசியமாகவே காணப்படல் வேண்டும். திட்டங்கள் பகிரங்கமாக நடைபெறுகின்றபோது எதிரிகள் இலகுவில் அவற்றை முறியடித்து விடுவர். திட்டமிடலை மறைவாகச் செய்யாத ஒரு சமூகம் ஒருபோதும் வெற்றி பெற மாட்டாது. வெற்றி பெறாமை மட்டுமன்றி அச்சமூகம் நிலைப்பதுவும் சாத்தியமற்றதாகிவிடும். குறிப்பாக வளர்நிலையில் இருக்கிற ஒரு சமூகமோ, கட்சியோ, இயக்கமோ இரகசியமாக செயற்படுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்றைய சர்வதேச இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வேரோடு பிடுங்கியெறியக் காத்திருக்கிறார்கள். முஸ்லிம்கள் ஒன்றுபடுகிறார்களா? திட்டமிடுகிறார்களா? என்று உன்னிப்பாய் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் முஸ்லிம்கள் ஒன்றுபடுவதும், திட்டமிட்டுச் செயற்பட்டு ஒரு சக்தியாய் மாறுவதும் எதிரிகளுக்கு எப்பொழுதும் அபாயமானதாகவே இருக்கும். எனவே முஸ்லிம்களது செயற்பாடுகளை கண்டறிவதற்காக எல்லா வழிமுறைகளையும் கையாளத் தொடங்கியிருக்கிறார்கள்.

இத்தகைய ஒரு சூழலில் முஸ்லிம்கள் தங்களது திட்டங்களையும் செயற்பாடுகளையும் மிகவும் இரகசியமாகவே அமைத்துக் கொள்ளல் வேண்டும். குறிப்பாக இஸ்லாமிய இயக்கங்கள் குறித்த பயம் இஸ்லாத்தின் எதிரிகளிடத்தில் பாரியளவு காணப்படுகிறது. எனவே அவர்களை நுணுக்கமாக அவதானிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த இக்கட்டான நிலையில் இரகசியச் செயற்பாடு கூடாது, ஆதாரமற்ற செயல் எனப் பிரச்சாரம் செய்வது எதிரிகளுக்கு தமது வேலையை இன்னும் இலகுபடுத்திக் கொடுப்பதாய்த்தான் அமைந்து விடும்.

இந்த பத்தி தெளிவாகவே ரகசிய வேலைத்திட்டங்களை பண்ண வேண்டியதைப் பேசுகிறது. யாருக்கு எதிராக? முஸ்லீமல்லாத இந்து கிரிஸ்துவ தமிழர்களுக்கு எதிராகவா?

இனி இன்னுமோர் கருத்திற்கு வருவோம். அது இஸ்லாத்தின் மத்ஹபுகளுக்கு எதிரான போர்ப் பிரகடனம். மத்ஹப் என்றால் கக்கூஸ் (மலசலகூடம்) என்று கூறி, மக்கள் மனதுகளில் மத்ஹப் பற்றிய மரியாதையை மலினப்படுத்தி விடுகிறார்கள். அதைவிட ஒருபடி மேலே சென்று மத்ஹபுள் யூத கிறிஸ்தவ சதி என்று கூறி, இஸ்லாத்தின் சட்டப் பாரம்பரியத்தை அழித்தொழிக்கும் முயற்சி நடக்கிறது. இதன் தொடராய் அந்த மத்ஹபுகளின் இமாம்கள் தூற்றப்படுகிறார்கள். அவர்கள் பற்றிய மதிப்புணர்வு மக்கள் மனங்களில் இருந்து அப்புறப்படுத்தப்படுகிறது. தொடராய் மற்றொரு வேலையும் நடக்கிறது. அந்த மத்ஹபுகளைச் சார்ந்து நிற்கும் கிராமங்களின் இன்றைய மௌலவிமார்களும் கொச்சைப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் மீது மக்கள் வைத்திருந்த கண்ணியம் அழிக்கப்படுகிறது. இளைஞர்கள் அவர்களுக்கு எதிராகத் தூண்டப்படுகிறார்கள். அவர்களது பேச்சைக் கேட்கவோ கட்டுப்படவோ கிராம மக்கள் தயாராக இல்லை. மௌலவி என்ற ஒரு தலைமையின் கீழ் ஒன்று திரண்டிருந்த கிராம மக்கள் சிதறடிக்கப்படுகிறார்கள்.

மத்ஹபுகள் அவசியமற்றதாகக் காண்பது என்பது முஸ்லிம் சமூகம் தனது வரலாற்றை வேண்டாம் என்பதாகும். இன்றைய உலகின் கலாச்சார அறிவியல் போட்டியில் வெற்றி பெறுவதற்கு அந்தப் பழைய பாரம்பரியங்கள் துணைநிற்கப் போகின்றன. வரலாறு இல்லாத, பாரம்பரியங்கள் இல்லாத ஒரு சமூகம் எதிர்காலத்தில் எழுந்து நிற்கப் போவதில்லை. மத்ஹபுகள் எனும் இஸ்லாத்தின் இந்த சட்டப் பாரம்பரியம், வேறெந்த சமூகத்திற்கும் வாய்த்திராத ஒரு பொக்கிஷம். அதனை முஸ்லிமல்லாதோரே ஏற்றுக் கொள்கின்றனர். சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாய் இருந்த இலங்கையைச் சேர்ந்த வீரமந்திரி என்பவர், இஸ்லாமிய சட்டப் பாரம்பரியத்தை மறந்து விட்டு, நவீன உலக சட்டம் செல்லமுடியாது. ஏனெனில் அப்போது ஒரு சிறகிழந்த பறவை போல்தான் சட்டம் காணப்படும் என்பதாகக் குறிப்பிட்டார். நிகழ்கால எதிர்கால சட்ட உருவாக்கத்திற்கு மத்ஹபுகள் எனும் அந்த சட்டப் பாரம்பரியம்தான் அத்திவாரமாய் அமைகிறது. இஸ்லாம் ஒரு சட்டமாக சமூகமாக அரசியலாக வளர்வதை இஸ்லாத்தின் எதிரிகள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். எனவே, இஸ்லாத்தின் அனைத்துப் பாரம்பரியங்களும் அழித்தொழிக்கப்பட்டால் அதற்கு நிச்சயமாய் எதிர்காலம் இல்லாது போய்விடும். எதிரிகளின் இந்த அபிலாஷையை நிறைவு செய்வதுபோல்தான் மத்ஹபுகளுக்கு எதிரான பிரசாரம் காணப்படுகிறது.

இதன் தொடராய், பள்ளவாயல்களுக்கும், மௌலவிமார்களுக்கும் கட்டுப்பட்டு ஒரு தலைமையின் கீழ்க் காணப்பட்ட கிராமங்கள் மத்ஹப் எதிர்ப்பு பிரச்சாரத்தினால் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. மௌலவிமார்கள் ஈனர்களாய்க் காட்டப்பட்டிருக்கிறார்கள். தலைமைக்குக் கட்டுப்படும் பண்பு மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. வீம்பும் பிடிவாதமும், தான்தோன்றித்தனமும், மக்கள் மனங்களில் விதைக்கப்பட்டிருக்கின்றன. ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல் கட்டுக்கோப்பு சீர்குலைக்கப்பட்ட ஒரு சமூகம் பலசாலியாய் இருக்க மாட்டாது. எதிரிகள் தாம் நினைத்ததைச் சாதித்துக் கொள்ள பொருத்தமான வாய்ப்பு இதுவாகத்தான் இருக்கும்.

இனி மற்றோர் விடயத்திற்கு வருவோம். இது ஒரு கருத்தல்ல, சமூகக் கட்டுக்கோப்பை கவனமாய் சீர்குலைக்கும் ஒரு செயல்வடிவம். அண்மைக்காலமாய் அதிகரித்து வரும் ஒரு செயல் வடிவம். அதுதான், கிராமங்களில் சில இளைஞர்கள் தூண்டப்பட்டு, அவர்கள் தமக்கென தனியான பள்ளிவாயல்கள் அமைத்துக் கொண்டு செல்வது . ஆரம்ப நாட்களில் வெறும் ஐந்து நேரத் தொழுகைக்காக மட்டுமே அந்தப் பள்ளிவாயல்கள் பயன்பட்டன. ஆனால் தற்போது, ஜும்ஆத் தொழுகை ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. கிராமங்களின் கட்டுக்கோப்பை மீறி, விளைவுகள் பற்றி சிறிதும் கவலைப்படாமல், பேச வந்த சமாதானப் பேச்சுக்களையும் எட்டிக் காலால் உதைத்துவிட்டு ஆரம்பிக்கப்பட்டன அந்த ஜும்ஆத் தொழுகைகள். பித்அத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக இவ்வாறு செய்வது இஸ்லாத்தில் கூடுமா கூடாதா என்ற வாதவிவாதத்திற்கப்பால், இதில் இருக்கிற ஒரு அபாயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்று முஸ்லிம்களின் பிரதான தேவை ஒன்றுபடுவதுதான் பிரிவது அல்ல. உலகெங்கும் முஸ்லிம்களைப் பீடித்துள்ள பெரிய நோய் பிரிவினைதான். உண்மையில் இது திட்டமிட்டு நுழைவிக்கப்பட்ட நோய். எதிரிகளின் முன்னால் முஸ்லிம்களது பலத்தைக் குறைப்பதற்கான ஒரு முயற்சி இது. அந்த எதிரிகளின் முயற்சிக்குப் பலம் சேர்க்கக்கூடாது. கிராமங்களில் நடைபெறும் இத்தகைய பிரிவனைகள் முஸ்லிம்களின் கட்டுக்கோப்பைக் குலைத்து, எதிர்கால இருப்பைப் பலவீனப்படுத்துகிறது. அதுதான் எதிரிகளின் நோக்கம், அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இடமளிக்கக் கூடாது.

மேலே நான் பேசிய, தற்போது சமூகத்தில் பரவியுள்ள கருத்துக்களும் நடைமுறைகளும் மொத்தமான பார்வையில் பார்க்கின்றபோது, முஸ்லிம்கள் சமூகமாக, ஒரு தலைமையின் கீழ் கட்டுக்கோப்புடன் ஒன்றுபட்டு வாழ்ந்து, ப+மியில் கால்பதித்து, எதிர்காலத்தில் ஒரு சக்தியாக மாறும் செயற்பாட்டிற்கு தடையாக அமைவது போல்தான் தோன்றுகின்றன. எனவே, இந்த செயற்பாடுகளும் சிந்தனைகளும் வெறுமனே இயல்பால் தோன்றுகின்ற இஜ்திஹாதுகளாகவோ செயல்களாகவோ கருத முடியாதிருக்கின்றன. இவற்றிற்குப் பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முஸ்லிம் சமூகத்தை அல்லாதான் காப்பாற்ற வேண்டும்.

ஏன் சமூக ரீதியில் இவ்வாறு முஸ்லிம் சமுதாயம் தான் தோன்றிய சமுதாயத்திலிருந்து தன்னை பிரித்துக்கொள்ள முனைகிறது? ஏன் மௌலவிக்களும், முல்லாக்களும் பிரிவினைவாதிகளாகவும், பிரிவினைவாதத்தை போதிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்? குரானிடம்தான் போகவேண்டும்.

3:28 முஸ்லிம்கள் முஸ்லிம்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்வி\யத்திலும் சம்பந்தம் இல்லை. இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான். மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.

47:4 காபிர்களை நீங்கள் சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள். கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்கள் மீது) கட்டுப்பாடுகளை அதிகரியுங்கள். அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான். ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான். ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.

9:23 ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.

*

ஈமான் - இஸ்லாமிய மத நம்பிக்கை

குஃபர் - இஸ்லாமிய மத நம்பிக்கை இல்லாதது

காபிர் - முஸ்லீமல்லாதவன்

#

மத்ஹப் என்பது பள்ளிவாயலில் முஸ்லீம் மதபோதகர் நின்று பிரச்சாரம் செய்யும் இடம். அந்த இடத்துக்குச் சென்று மூளைச்சலவை செய்துகொள்ள வேண்டும் என்று இந்த கட்டுரை கோருகிறது.

திரும்பத்திரும்ப எதிரி எதிரி என்று இந்த கட்டுரை பேசுகிறது. திரும்பத்திரும்ப கட்டுக்கோப்பைப்பற்றி பேசுகிறது. திரும்பத்திரும்ப சுதந்திர பள்ளிவாயல்களை எதிர்த்து பேசுகிறது. திரும்பத்திரும்ப மௌல்விகளுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று கோருகிறது. எந்த எதிரிக்கு எதிராக?

கிரிஸ்துவ தமிழர்களுக்கும் இந்து தமிழர்களுக்கும் இடையே எந்த விதமான பிரச்னையும் இல்லாதிருக்கும்போது, கிரிஸ்துவ தமிழர்களும் இந்து தமிழர்களும் ஒருவரை மற்றவர்கள் எதிரிகள் என்று அழைத்துக்கொள்ளாதிருக்கும்போது, ஏன் முஸ்லீம் தமிழர்கள் மட்டும், மற்றவர்களை எதிரிகள் என்று அழைக்கிறார்கள்?

ஏன் இப்படிப்பட்ட ஒரு விக்டிம் மெண்டாலிட்டி உருவாக்கப்படுகிறது? ஏன் இந்த விக்டிம் மெண்டாலிட்டியை பள்ளிவாசலில் வாரந்தோறும் வந்து உருவேற்றிக்கொள்ள வேண்டும் என்று கோருகிறார்கள்? சகோதர தமிழர்களை தமிழர்கள் என்றும், தம்மை முஸ்லீம்கள் என்றும் அடையாளப்படுத்தி ஏன் பிரிவினை உண்டாக்கப்படுகிறது? மற்றவர்களை எதிரிகள் என்று அடிக்கடி குறித்து ஏன் சகோதர தமிழர்கள் மீது அவநம்பிக்கை உண்டாக்கப்படுகிறது?

இப்படிப்பட்ட ஒரு அவநம்பிக்கையை, முஸ்லீமல்லாதவர்கள்மீது விரோதத்தை உருவாக்குவது, இவர்கள் தங்கள் மத நம்பிக்கை என்று வைத்துக்கொண்டிருக்கும் இஸ்லாமே, அதன் புத்தகமான குரானே என்பது தெளிவு.

இது இலங்கை முஸ்லீம்களுக்கு மட்டுமான கட்டுரை என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். அமெரிக்காவுக்கு ஒரு மாதிரி, ஆஸ்திரேலியாவுக்கு வேறொரு மாதிரி, இலங்கைக்கு ஒரு மாதிரி, ஈராக்குக்கு ஒரு மாதிரி, இதமிழ்நாட்டுக்கு ஒரு மாதிரி என்று இஸ்லாம் இல்லை. இஸ்லாமில் பன்மைத்தன்மை இருக்கிறது என்று பேசுவது ஒரு சில குப்பை அறிவுஜீவிகளுக்கு சப்பைக்கட்டு கட்ட உதவலாம். எந்த முஸ்லீம் “அறிவுஜீவி”யிடமும் போய் கேட்டுப்பாருங்கள். இஸ்லாம் ஒன்றுதான். அதன் போதனை ஒன்றுதான். அது இலங்கையில் எப்படி ரகசிய செயற்பாடுகள் மூலம், மௌல்வி போதனைகள் மூலம், இஸ்லாமிய அரசை நிர்மாணம் செய்ய முனைகிறதோ அதே போலத்தான் தமிழ்நாட்டிலும் செய்யும். நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள விரும்பினால், தமிழ்நாட்டில் முஸ்லீம்களை பாதுகாக்கப்பட வேண்டிய சிறுபான்மையினராக பார்த்து, பாதுகாத்துக்கொண்டு இருக்கலாம். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். பாகிஸ்தான் உருவாக பெரும் பணம் கொடுத்ததில் முதலாவது இடம் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் செல்வந்தர்களுக்குத்தான். அவர்கள் பாகிஸ்தான் போகப்போவது இல்லை என்று தெரிந்திருந்தாலும் அவர்கள் ஜின்னாவுக்கு வாரி வழங்கினார்கள்.

முஸ்லீம் சமூகத்தை முகம்மதுவின் அல்லா காப்பாற்றிக்கொள்ளட்டும். முகம்மது உருவாக்கிய இந்த கும்பலிலிருந்து நம்மை நாமேதான் காத்துக்கொள்ள வேண்டும்.

இந்த மதக்கும்பலின் நடைமுறை, அரசியல் கொள்கை, மற்றவர்களுடனான உறவு அனைத்தும் 1400 வருட பழைய மதக்கோட்பாடுகளின் மூலமாகவே நிச்சயம் செய்யப்படுவதை பார்க்க வேண்டும். இத்தோடு இணைந்து வாழ்ந்துவிட முடியும் என்று நினைப்பது கேனத்தனம்.

பொலிடிகலி கரெக்ட்டாக இருக்க விரும்புபவர்கள், இதைப்பற்றி பேசாமல் இருக்கலாம். ஆனால், இந்த மக்கள் இந்த மூளைச்சலவை மதத்திலிருந்து வெளியேறும் வரைக்கும், முஸ்லீமல்லாதவர்களுக்கு பாதுகாப்பில்லை. இணக்கமான வாழ்க்கை இல்லை. சமாதானமான சூழ்நிலை இல்லை.

இது இஸ்லாமுக்கும் மற்ற மதங்களுக்கும் நடக்கும் போட்டி அல்ல. யாரிடம் அதிக எண்ணிக்கை உள்ள ஆட்கள் இருக்கிறார்கள் என்ற போட்டி அல்ல. ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கும் தீங்கு இஸ்லாம் என்ற கருத்து.

பெரும்பாலான முஸ்லீம்கள் இந்த மூளைச்சலவை மதத்தில் பிறந்துவிட்டதற்காக வருத்தப்படுபவர்கள்தான். அவர்கள் வெளியேற ஒரு வழியை திறந்துவைத்திருப்பது இந்துக்களுக்கும் கிரிஸ்துவர்களுக்கும் பௌத்தர்களுக்கும் நல்லது. மனித சமுதாயத்துக்கு நல்லது.

நீங்கள் அழையுங்கள். அவர்கள் வருவார்கள்.

1 Comment »

The URI to TrackBack this entry is: http://ennamopo.blogsome.com/2005/11/18/53-meelparvai-article-and-explanation/trackback/

  1. My dear brother / sister,

    I am from srilanka, I think this write from India tamil nadu. My mother tong also Tamil we also like to tell without any passisem we are Tamils. But srilankan tamilian history is not in that path. All tamil hindu leaders avoid all Muslims in their every activity. This is the full history. It is continuing until now. The good example is LTTE attack against to tamil muslims. They kill Muslims in side the masjidh. They washed out all Muslims in Jafna. This is the srilankan history. Every society need strong in their way. So meelparvai is talking about Muslims community & political. Your article is telling that “we need to take out all Muslims from Islam” you are a man against to Islam so how I can live near to you without any power. As like you many associations, governments thinking in your view. So to protect our self & our community we need political power & strength. This is what meelparvai is talking. Islam means peaceful life. I am advising to you please read the quran, prophet’s life & Islamic history carefully & pure heart you will understand what is Islam. How it is talking about other community. I am praying for you for your peaceful life one day you will understand about Islam.

    Comment by Rifas Mohamed — August 3, 2006 @ 12:16 pm

RSS feed for comments on this post.

Leave a comment

Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>























Get free blog up and running in minutes with Blogsome
Theme designed by Hadley Wickham